Posts

Showing posts from September, 2021

குறட்டை ஆபத்தானதா??

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.  விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது? தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது. அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது. அதிக சத்தத்துடன் குறட்டை வர என்ன காரணம்? சளியுடன் கூடிய மூக்கடைப்பு ஒவ்வாமை (allergy) சைனஸ் தொல்லை அடினாய்டு/டான்சில் வளர்ச்சி மூக்கு இடைச்சுவர் வளைவு (deviated nasal septum) தைராய்டு பிரச்சினை உடல் பருமன் (obesity) கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது  புகை பிடிப்பது,  மது குடிப்பது,  அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவ...

தூக்கத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

தூக்கமின்மை நம்மில் பல பேருக்கு இருக்கும் பிரச்சனை. ஆரோக்கியமான மனிதன் 7 முதல் 8 மணி நேரம் வரை தடையில்லாமல் தூங்கணும், காலையில் கொஞ்சம் சீக்கிரம்(before sunrises) எழுந்திருக்கணும். பலருக்கு இரவில் சரியாக தூக்கம் வருவதும் கிடையாது. ஏனென்றால், 1. அதிக மன உளைச்சல் (குடும்பம், வேலை,பொருளாதாரம், படிப்பு.....) இதெல்லாம் பற்றிய தேவையில்லாத அதிக கவலை. 2. செரிமானம் ஆகாத உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வது. 3. பகலில் அதிக நேரம் தூங்குவது. 4. அதிகமாக புகை பிடிப்பது. 5. காப்பி/டீ அதிகம் பருகுவது. 6. பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்(menopause), மாதவிடாய் பிரச்சினைகள் அதனால் வரும் உடல் வலி அசதியால் தூக்கம் வராமல் போவது,    7. அதிக நேரம் மொபைல் போன், டிவி,  கம்ப்யூட்டர் பார்ப்பது. இதுபோல் இன்னும் ஏராளமான காரணங்கள்........ சரியாக தூங்காம இருந்தா நம்ம உடம்பில் என்னென்ன பாதிப்புகள் எல்லாம்  வரும்னு தெரியுமா? இதைப் பற்றி யோசித்தது உண்டா? 1. சர்க்கரை நோய். 2. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய கோளாறுகள். 3. பார்வை குறைபாடு பிரச்சினைகள். 4. உடல் பருமன் அதிகரிக்கும். 5. பகல் நேரங்களில் எப...

இதயத்தை பாதுகாப்போம்!

24 மணி நேரமும் ஓய்வு இன்றி வேலை செய்யும் ஓர் உறுப்பு நம் இதயமாகும். தாயின் கருவில் முதலில் தோன்றும் உறுப்பும் இதயமே.  அன்பு, காதல், இரக்கம், ௧ருணை என அனைத்து உணர்வுகளோடும் நாம் இதயத்தை ஒப்பிடுவோம். இரக்கம், கருணை இல்லாதவரை நாம் இதயமே இல்லாதவன் என்போம். அத்தகைய இதயத்தை பத்திரமாக பாதுகாப்பது நம் கடமை. உலக அளவில் இதய நோய் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் மாரடைப்பு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மாரடைப்பு காரணமாக உலகம் முழுவதும் 17.3 மில்லியன் மக்கள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் தான் காணப்படுகிறது.  கடந்த 20-ம் நூற்றாண்டில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்தது. ஆனால் 21-ம் நூற்றாண்டில் 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் இதய நோய்களால் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரும் மாரடைப்புக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழ...

பெண்கள் தங்கள் மார்பக பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது உண்டா??

இது எளிதில் கடந்து செல்லக்கூடிய பதிவு அல்ல. பல பெண்களின் தங்களது மார்பக பராமரிப்பில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லை. அதன் காரணமாகவே பெண்கள் அதிக அளவில் மார்பகம் சார்ந்த பிரச்சனைகளால் (மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், மார்பக வலி...) அவதிபடுகின்றனர். பெண்கள் பலர் தங்களுக்கு வரும் மார்பக பிரச்சனைகள்  பற்றி வெளியில் பேச தயங்குகின்றனர். ஆனால் மார்பக பிரச்சனைகளையும் சந்தேகங்களையும் வெளிப்படையாக பேசுவது பெண்கள் நலனில் மிக அவசியமான ஒன்றாகும். மார்பகங்கள் பற்றி நமக்கு இருக்கும் சந்தேகங்கள்: 1.மார்பகம் என்பது பெண்ணின் ஒரு உறுப்பு. இதன் வேலை குழந்தைபேறின் போது தன் குழந்தைக்கு பால் சுரப்பது ஆகும். பருவம் அடைவது தொடங்கி குறிப்பிட்ட வயது வரை மார்பகங்கள் வளர்ச்சி அடையும். ஆண்களுக்கு பால்சுரப்பு பணி இல்லாததால் அவர்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைவது இல்லை. 2. இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருப்பது இல்லை. ஒன்றைவிட ஒன்று சற்று பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கும். இது இயல்பான ஒன்று.  3. ஒரு சராசரி பெண்களின் மார்பகம் 5.3 முதல் 7 அவுன்ஸ் (200ml) பாலை தாங்கும் சக்தி கொண்டது. இது தாய்மை அடையு...