Posts

Showing posts from August, 2021

வலிமிக்க மாதவிடாயால் அவதிபடுவது ஏன்?

மாதாமாதம் வரும் மாதவிடாய் நம்மில்  பலருக்கு வலியுடன் கூடியதாகவே உள்ளது. சிலருக்கு வலி தாங்க கூடியதாகும், சிலருக்கு வலி தாங்க முடியாமல் அவதிபடுவதாகவும் இருக்கும். 'ஏன்தான் இந்த வலி எல்லாம் வருதோ. ஏன்தான் பெண்ணாக பிறந்தமோ ' ௭ன பல பெண்கள் மாதவிடாய் வலியால் புலம்புவதை நாம் கோட்டு இருப்போம். மாதவிடாய் வலியால் அவதிபடும் பெண்கள் பலர் படுக்கையில் உருண்டு, பிரண்டு தனக்கென வலிகுறைய சௌவுகரியமான சூழலை தேடுவார்கள். அந்த 3 நாட்களும் மிகுந்த வலி வேதனையுடனேயே ௭ப்போது மாதவிடாய் முடியும் என காத்திருப்பார்கள். மாதவிடாயின்போது வலி வருவது ஏன்?  மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும், மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. மாதவிடாய் சமயத்தில் விரிவடைந்திருக்கும் கர்ப்பப்பை, குருதி வெளியேறி சுருங்குவதால் அந்த வலி ஏற்படுகிறது. இந்த மாதவிடாய் வலி என்பது இயல்பானது. அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது அடிவயிற்றுப்பகுதியில் தசைப்பிடிப்பு, தொடைப் பகுதி வலி, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில தொந்தரவான அறிகுறிகள் தோன்றுகின்றன. இது சகஜம்தான்....

மாதவிடாய் பற்றியபோதிய விழிப்புணர்வு நமக்கு உள்ளதா??

மாதவிடாய் ௭ன்றால் மாதாமாதம் 3 நாள் உதிரபோக்கு வரும் அப்போது வீட்டுல ஒதுங்கி இருக்கனும், தலைக்கு குளிக்கனும். வீட்டுக்கு தூரம், தீட்டு என்று அருவருக்கதக்க ஒன்றாகதான் இன்றும் பலரால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வீட்டு பெரியவர்களிடம்  இன்றும்   மாதவிடாய் என்றால் தீட்டு, சமையலறைக்கு வர கூடாது யாரையும் தொடக்கூடாது  போன்ற மனநிலையே நிலவுகிறது.      மாதவிடாய் என்பது என்ன?  முதல் மாதவிடாய்  என்பது 13 லிருந்து 15 வயது  நடைபெறுகிறது. 28 லிருந்து 32 நாளுக்கு ஒருமுறை மாதமாதம் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள்  உதிரப்போக்கு  வருகிறது. இது பெண் தாய்மை அடையும் நிலையை அடைந்து விட்டாள் என்பது உணர்த்துகிறது.   பெண்ணின் கருப்பை மாதமாதம்  கருமுட்டையை உருவாக்கி ஆணின் விந்து காக காத்திருக்கும் விந்து வரவில்லை எனில் அது தன்னைத் தானே அழித்துக் உதிர போக்காக வெளியேறுகிறது.இது சுழற்சி முறையில் நடக்கும் ஒரு இயற்கை நிகழ்வாகும். நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை,  மலம், சிறுநீர் போல உதிரப்போக்கும் ஒரு உடல் கழிவு என்பதை நாம் அனைவரும் புரிந்...

மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம்( Premenstrual syndrome)

மாதவிடாய்க்கு முந்தைய மனஅழுத்தம் (PMS-Premenstrual Syndrome) பற்றி நமக்கு தெரியுமா??? பல பெண்கள் இன்று அலுவலக பணிகள், வீட்டு வேலைகள் என இயந்திரமாக சுற்றி வருகின்றன. இவர்களுக்கு தனது உடல்நிலையை பற்றி கவலை கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ நேரம் இருப்பதில்லை.  இத்தகைய பெண்களே இன்று அதிக அளவில் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தால் அவதிக்கு உள்ளாகின்றனர். தோராயமாக 70 சதவீதம் பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம்  உள்ளது. பூப்படையும் காலம் துவங்கி மாதவிடாய் நிற்கும் சமயம் வரை மாதாமாதம் உடல் ரீதியாக பல மாற்றங்களை 30-40 வருடங்கள் பெண்கள் சந்திக்கின்றனர். இந்த மாற்றங்களுக்கு மாதவிடாய் காலத்தில் நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே காரணம். ஹார்மோன்கள் நம் உடலின் இயக்கம் மற்றும் மனதில் தன்மையும் மாற்றும் வல்லமை கொண்டது. மாதவிடாய் முடிந்த முதல் 2 வாரங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இந்த  சமயத்தில் பெண்கள் மிக உற்சாகமாகவும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள். வேலைகளில் விருப்பத்துடன் செய்வது, தனது தகுதியை மேம்படுத்திக் கொள்வது, தனது துறையில் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வது என்று மிக உ...